BREAKING NEWS

பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.

பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகாவில் சமீபத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாராக சிவ சண்முகம் என்பவர் பதவியேற்றுக்கொண்டார்.

 

அவருக்காக வழங்கப்பட்டு இருந்த அரசு வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் பேரணாம்பட்டு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தாரின் வாகனத்தை (Tata sumo) எடுத்துச் சென்று விட்டதால் எங்கு செல்வதற்கும் வாகன வசதி இல்லாமல் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார் சிவ சண்முகம் மிகவும் அவதிப்படுகிறார்.

 

இந்த மாதம் 31 ஆம் தேதி பணி ஓய்வு பெற இருக்கிற சிவ சண்முகம். தனது பணிகளை செய்வதற்கு அரசு வாகனம் இல்லாததால் பேரணாம்பட்டு தாலுகாவில் நடைபெறும் முக்கியமான சம்பவ இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக பேர்ணாம்பட்டு சமூக ஆர்வலர்களிடம் கூறப்படுகிறது.

 

எனவே சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் சிவ சண்முகத்திற்கு அரசு வாகனத்தை வழங்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம். வரவேண்டும் என்பதே காரணம் மட்டும் பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

CATEGORIES
TAGS