BREAKING NEWS

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் 10.02.2023 மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி
மற்றும் யூத் ரெட் கிராஸ்சும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி
முதல்வர்.Dr. ஜீன் ஜார்ஜ் இரத்ததான முகாமை துவங்கி வைத்துதார்.
பின் துணை முதல்வர். Dr.ஜான்சன் ஜெயக்குமார், கல்லூரியின் காசாளர். Dr. ஜூலியஸ் விஜயகுமார் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மயிலாடுதுறை மாவட்ட சேர்மன் பேராசிரியர்.Dr.G.V. பாண்டியன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்கள் பேராசிரியர.Dr.கவிதா, பேராசிரியர்.Dr. இளஞ்செழியன் மற்றும் பெண்கள் அமைப்பு தலைவி பேராசிரியர் Dr. ஷீபா ஜூலியஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த ரத்த தான முகாமிற்கு மயிலாடுதுறை மற்றும் ஆக்கூர் அரசு மருத்துவமனை மருத்துவர். Dr. ராஜேந்திரன் மற்றும் மெடிக்கல் சூப்பர்வைசர்.திரு. வெங்கடேசன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

பேராசிரியர் Dr. நெல்சன் அமிர்தராஜ், இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர இரத்த தானம் செய்த மாணவ மாணவிகளுக்கும் முகாமில் பங்கு உதவியாக இருந்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்.

இரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். மயிலாடுதுறை மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக சேர்மன். பேராசிரியர் Dr. G.V. பாண்டியன் ஓருங்கிணைத்து இந்த ரத்த தான முகாமை நடத்தினர்.

 

செய்தியாளர் க. கார்முகிலன்.

CATEGORIES
TAGS