BREAKING NEWS

போதையில் விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் – குழந்தை உள்பட 6-பேர் படுகாயம்.

போதையில் விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் – குழந்தை உள்பட 6-பேர் படுகாயம்.

திருச்சி கே கே நகர், பெரியார் மணியம்மை பள்ளி எதிரே உள்ள சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை மோதி தலைக்குப்புற விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் காரை ஓட்டிய வரையும், இருசக்கர வாகனத்தில் சென்று காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது காரை ஓட்டி வந்த ஆசாமி குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

மேலும் காப்பாற்றிய பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டி ரகளையில் ஈடுபட்டார். அப்போது இந்த விபத்து குறித்து அறிந்து வந்த கேகே நகர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு வந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,

காரை ஓட்டி வந்த போதை ஆசாமி நாவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உச்சி கருப்பு வயது 45 என்பதும் இவர் குடிபோதையில் கேகே நகர் எல்ஐசி காலனி பகுதியில் இருந்து அந்த சாலை வழியாக சென்ற 4-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மோதி விபத்துக்குள்ளாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 6- பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )