BREAKING NEWS

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு எம.எல.ஏ.கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு எம.எல.ஏ.கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜரின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட 5வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

 

 

விழாவில் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் மற்றும் காமராஜரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.

 

 

இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலை நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசுகளை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழரசன்,

 

எஸ்.எஸ்.டிம் கல்லூரி செயலாளர் கண்ணன்,மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், நகர செயலாளர் விஜய்பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,

 

 

ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன்,செண்பகமூர்த்தி,வள்ளியம்மாள் மாரியப்பன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள்,

 

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் மனோகரன், பழனிகுமார்,முருகன்,கோபி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )