மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி
மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் மற்றும் மாவீரன் பகத்சிங் அவர்களின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
விழாவில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமையில் அறக்கட்டளைத் தலைவர் ராஜபாண்டி. முன்னிலையில், முகாமில் ஜமால் பள்ளிவாசல் முகமது அலி ஏ.சி.ஏ கிறிஸ்துவ சபையின் பிலிப்ஸ் தேவகுமார், பிளெஸ்சன், ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் அர்ச்சகர் ஶ்ரீதர், உள்ளிட்டோர் மத நல்லிணக்கத்தை வலியுருத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிழக்குக காவல்நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் முனைவர் சம்பத்குமார், விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் கதிரேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் ஜோதிபாசு பகத்சிங் ரத்ததானக் கழக அறக்கட்டளை செயலாளர் சண்முகராஜ்,
நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் கட்சி நகரத்தலைவர் அருண்பாண்டியன்,அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர். சரஸ்மோனிகா, செவிலியர்கள் ராதா, பூல்தாய், மற்றும் ஆய்வாளர் சேவியர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.