மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தனபால் என்பவரின் மகன் 14 வயதுடைய புகழேந்தி.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் புகழேந்தி வீட்டிற்கு அருகில் உள்ள 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக கிணற்றில் இருந்த மரக்கிளையை பிடித்துக்கொண்டு சத்தம்போட்டுள்ளார்.
சிறுவன் குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
CATEGORIES திருச்சி
TAGS கிணற்றில் தவறி விழுந்துசமயபுரம் தீயணைப்பு துறைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர்மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்