மண்ணச்சநல்லூர் அருகே விபத்தில் ஒருவர் படுகாயம்.

செய்தியாளர் – சூ.வினோத்குமார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.
மணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் செந்தாமரை கண் பகுதியைச் சேர்ந்தவர் 53 வயதான குமார், இவர் தனது மோட்டார் பைக்கில் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சிறுகாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அதேபோல் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அக்ரஹரத்தைச் சேர்ந்த 23 வயதான விக்னேஷ் சரக்கு வாகனத்தில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கிளியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக மோட்டார் பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் குமார் படுகாயம் அடைந்தார் . விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.