BREAKING NEWS

மத்திய ஒன்றிய அரசை கண்டித்து, திமுக சார்பில்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய ஒன்றிய அரசை கண்டித்து, திமுக சார்பில்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம்.

 

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட கழகச் செயலாளர் இலா பத்மநாபன் முன்னிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய ஒன்றிய அரசை கண்டித்து,  கல்விக் கொள்கை மாணவர் உரிமையை பறிக்காதே, இந்திய நாட்டின் இறையாமையை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் இந்தி மொழி வேண்டாம் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கேயம் தாராபுரம் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் உள்ளிட்ட நான்கு தொகுதியில் சேர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுக கட்சியினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

 

திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி மாணவரணியினர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

 

 

இதில் தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், உள்ளிட்ட தொகுதிகளிலிருந்து இளைஞர் அணி, மாணவர் அணிமற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழக திமுக கட்சி தொண்டர்கள் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )