BREAKING NEWS

மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா.

மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. பேரணியை கலைமகள் கல்வி நிறுவனங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தமிழ் செல்வி கலந்து கொண்ட துவங்கி வைத்தார்.

 

 

அதைத்தொடர்ந்து தொலைக்காட்சி புகழ் நகைச்சுவை இயக்குனர் எஸ்.பி.பாஸ்கரின் சிறப்புரையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் நெடுஞ்செழியன், செயலர் ஜெயபிரகாசம், நிர்வாக குழு இயக்குனர் என்.எஸ். குடியரசு மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS