மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6வது நினைவுநாளை முன்னிட்டு அண்ணதானம்.
செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைமையூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினவுநாளை முன்னிட்டு,..
முன்னாள் முதல்வரும் தற்காலிக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆலோசனைப்படி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மகளிரணி இணை செயலாளருமான கனிதாசம்பத் முன்னிலையில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் ஒன்றியகுழு பெருந் தலைவருமான E.சம்பத்குமார் தலைமையில் அண்ணதானம் வழங்கப்பட்டது.
இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தி ஏழைஎளிய மக்கள் ஆயிரம் பேருக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் DRS செல்வம், வழக்கறிஞர் கோபிநாத், ஜல்லிசெல்வம், சங்கர் என்ஆர்வி, சந்திரன், மேஸ்திரி திருநாவுக்கரசு உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.