மறைமலைநகரில் 3லட்ச ரூபாய் மதிப்பிலான கார்பரேட்டர்கள் பறிமுதல்; 2 பேர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் யூகால் பியோல் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு பணியாற்றி வரும் சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் அதே கம்பெனியில் டிரைவராக முனியான்டி என்பவரும் பணியாற்றி வந்துள்ளனர்.
சிவப்பிரகாஷ் முனியான்டியும் சேர்ந்து கம்பெனியில் இருந்து இருசக்கர வாகனத்திற்கு பயன்படுத்தும் கார்பரேட்டர்களை கடந்த மூன்று மாத காலமாக தொடர்ந்து திருடி சென்றது தெரியந்தது.
இது குறித்து மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சிவப்பிரகாஷ் மற்றும் முனியான்டி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று லட்சரூபாய் மதிப்பிலான கார்பரேட்டர்களை பறிமுதல் செய்து.
இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனர்.