BREAKING NEWS

மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..

மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதை கருத்தில் கொண்டு மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் மாண்டஸ் புயலை முன்னிட்டு விடுப்பு அளித்து அவர்களது பாதுகாப்பையும் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 

கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வெகு| தொலைவில் இருந்தும் பணிக்கு வருவதாலும் கடையை மூடிவிட்டு இரவு பணியை முடித்து நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும் அந்த நேரத்தில் கடுமையான புயல் சீற்றம் ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

எனவே தமிழகஅரசும் டாஸ்மாக் நிர்வாகமும் டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்கும் இன்று இன்றும் நாளையும் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )