BREAKING NEWS

மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான அடிக்கல் விழா அமைச்சர் பங்கேற்பு.

மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான அடிக்கல் விழா அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அவர்களும், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன் அவர்களும், நகரக் கழகச் செயலாளர் திரு.பொன்னுச்சாமி அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.ராமையா அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப.மதியரசன் அவர்களும்,

 

 

ஒன்றிய கழகச் செயலாளர் திரு.அண்ணாதுரை அவர்களும், ஒன்றிய குழு தலைவர் திருமதி.லதா அண்ணாதுரை அவர்களும், ஒன்றிய குழு துணைத் தலைவர் திரு.முத்துச்சாமி அவர்களும், நகராட்சி தலைவர் திரு மாரியப்பன் கென்னடி அவர்களும்,

 

 

கழக முன்னோடிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஒன்றிய குழு உறுப்பினர்களும், அரசுத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )