BREAKING NEWS

மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பணி நிறைவு விழா.

மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பணி நிறைவு விழா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தலையாறியாக பணியாற்றி அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்று மானாமதுரை அரிமண்டபம் கீழப்பசலை பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறந்த முறையில் பணியாற்றி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் மிகச்சிறந்த தலையாறியாக பணியாற்றிக் கொண்டிருந்த அரிமண்டபம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் தலையாரி அவர்கள் இன்று பணி நிறைவு விழா வெகு விமர்சியாக மானாமதுரை வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

 

 

இந்நிகழ்வில் மானாமதுரை வருவாய் வட்டாட்சியர், சாந்தி அவர்களது முன்னிலையிலும் விஏஓ தலையாரி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற ஈஸ்வரன் தலையாரி அவர்களுக்கு மணிமாலையும் பொன்னாடைகளும் அணிவித்து கௌரவப்படுத்தினர்.

 

 

பிறகு அவருடன் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும் அவர்களால் முடிந்த வேஷ்டி சட்டை பிரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்ற உபகரனை வாங்கி கொடுத்து கௌரவப்படுத்தினர்.

 

இந்நிகழ்ச்சில் அவரது குடும்பத்தினர் மனைவி அழகு மற்றும் மகன் காமாட்சி மகள் தவபழனியம்மாள் அவர்களும் அப்பாவின் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பொன்னாடை போற்றி கௌரவப்படுத்தினர்.

 

செய்தியாளர் வி.ராஜா

CATEGORIES
TAGS