மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு தொடர்பு பாலியல் வன்கொடுமை ஆசிரியர் கைது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு உதவி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிஎஸ்ஐ பள்ளியில் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு 10 ஆண்டுகளாக கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுசமயம் பெற்றோர்களும் மாணவர்களும் முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
அது சமயம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மானாமதுரை நீதிமன்றம் அருகே உள்ள காந்திசிலை இடையே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் ஒன்று திரண்டு கூட ஆரம்பித்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது இதுபோன்ற பள்ளிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆசிரியர் மீது பள்ளியில் ஆய்வு செய்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுபோன்ற பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதால் உடனடியாக பள்ளிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகிகளையும் உடனடியாக காவல்துறையினர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதியில் கூடியிருந்த பொது மக்களும் மாற்றுத்திறனாளிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறையினர் அவர்களை அழைத்து பள்ளி வளாகத்துக்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தையை தொடங்கினர் அவர்களை சுமூகமான பேச்சுவார்த்தைக்காக பள்ளி வளாகத்திற்குள் அழைத்துச்சென்றனர் பிறகு பேச்சுவார்த்தையின் போது மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ரா. கதிர்வேல் மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் மானாமதுரை வட்டாட்சியாளர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள.
ஆசிரியர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கூறினர். அப்போதும் இரண்டு மணி நேரமாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்தனர் இதனால் அப்பகுதியில் மிக பதட்டமான நிலையாக உள்ளது இதனால் காவல் துறையினரும் வட்டாட்சியரிடம் உடனடியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியரை மீது விசாரணை செய்து உடனடியாக கைது செய்வோம் என கூறியுள்ளார்.