BREAKING NEWS

மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி கிராமமே சோகத்தில் மூழ்கியது

மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி கிராமமே சோகத்தில் மூழ்கியது

செய்தியாளர் கொ. விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சிறுபாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம், இவருடைய மனைவி பெரியம்மா இவர் துணிதுவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிபுறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார்.

 

அந்நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது, இதனை சற்றும் எதிர்பார்க்காமல் பெரியம்மா கம்பியை தொட்டார் அப்போது பெரியம்மா மீது மின்சாரம் பாய்ந்து அவர் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார்.

 

இந்நிலையில் அலறல் சத்தம்கேட்டு அலறியடித்து ஓடி வந்த கணவர் ஆறுமுகம் அவர் தனது மனைவியை காப்பாற்ற முயன்றார் அப்போது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

 

இந்த தகவல் அறிந்த ஆறுமுகத்தின் மகன் மணிகண்டன் ஓடிவந்து தனது பெற்றோரை காப்பாற்ற முற்பட்டார். அப்போது மணிகண்டனையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்,

 

இதுகுறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் அங்கு வந்து மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

 

அவர்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தவிர பெரியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து வழக்குபதிவு செய்த வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை-மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )