மின்வேலியில் சிக்கிய கால்கள்; பறிபோன தந்தை, மகன்களின் உயிர்கள்: முயல் வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே முயல் வேட்டைக்காகச் சென்ற அப்பா மற்றும் மகன்கள் மூன்று பேர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை அடுத்த முகவூரைச் சேர்ந்த அய்யங்காளைக்கு, அஜீத், சுதந்திரபாண்டி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சுதந்திரபாண்டி அண்மையில் நடந்த காவலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். மேலும், ராணுவ வீரரான அஜீத்திற்கு கடந்த வருடம் திருமணம் ஆன நிலையில், கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக அஜீத் விடுப்பு எடுத்துக் கொண்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு வந்தார்.