மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது இதை போல் தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர் மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சுமைகளை ஏற்படுத்துவதாக அப்போது அவர்கள் குற்றம் சாட்டினர்.
