முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 40. ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது மனைவி கலையரசி வயது 35 ஒரு மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வருகின்றார்.
இரவு சீனிவாசன் வெளியில் சென்று இருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டிலிருந்த இரண்டு சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு கலையரசியை மிரட்டினர்.
அதன் பின்னர் வீட்டில் வைத்திருந்த ஐந்து பீரோக்களையும் உடைத்து அங்கு வைத்திருந்த 43 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூபாய் 18 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் அவர்கள் யாருக்கும் தகவல் சொல்லக்கூடாது என்று வீட்டில் இருந்த செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.
பின்பு வீட்டுக்கு வந்த சீனிவாசனிடம் அவரது குடும்பத்தினர் நடந்த சம்பவங்களை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் வேடசந்தூர் போலீசாருக்கு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, எஸ் பி பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் சந்திரன், வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.