முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூருக்கு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பேர்ணாம்பட்டு தாலூக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பேர்ணாம்பட்டு தாலூக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
தாசில்தாரர் வெங்கடேசன், ஒன்றிய ஆணையாளர் ஜி.ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, துணைத் தாசில்தார் இள.வடிவேலு, வருவாய் ஆய்வாளர்கள் சரஸ்வதி, கீதா, ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் எம்.உதயகுமார், எம்.ஜெயகுமார், வெங்கடேசன், சிவராமன்,முத்துமாரி,மேகநாதன், கோபிநாத், ஊராட்சி செயலாளர்கள் ஜெ.கலையரசன், சி.மாதவன், ஏ.மணிவண்ணன், எருக்கப்பட்டு வெங்கடேசன், ஆர்.புருஷோத்தமன், வி.நேதாஜி, லட்சுமி, எஸ்.இன்பசௌந்தரிபாய், மொரசபல்லி மோகன், அனிதா, துரைசாமி, கிராம உதவியாளர்கள் கோபால், கமலாபுரம் சுரேஷ்குமார், குப்புசாமி, சுந்தரேசன், வெங்கடேசபிரபு, மனோகரன், அனிதா,கே.நாகப்பன், சின்னசாமி, வரதன், சத்தியநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.