முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தஞ்சையில் நடைபெற்ற அரசு எஸ்.சி எஸ்.டி அனைத்து பணியாளர்கள் நலசங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்:

ஆதிதிராவிடர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்களை பெறுவதற்கு 2 லட்சம் ரூபாயாக இருந்த உச்சவரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சையில் நடைபெற்ற அரசு எஸ்.சி எஸ்.டி அனைத்து பணியாளர்கள் நலசங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு எஸ்.சி எஸ்.டி அனைத்து பணியாளர்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்திற்க்காக விடுதியை மூடாமல், கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்திட வேண்டும் என்றும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் நூலகம் அமைத்திட வேண்டும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் தேசிய மாணவர் படையை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.