முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு விளையாட்டு மைதானம் திறப்பு விழா.
தஞ்சாவூர் மாவட்டம், விளார் சாலை, பர்மாகாலனி, அண்ணா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமானதும்,
பர்மா தமிழர் அறக்கட்டளைக்கு சொந்தமானதும் மற்றும் அன்னதான அறக்கட்டளை சொந்தமான இடத்தில் அமைந்துள்ள பீலிக்கான் முனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் நான்கு புறமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு நமது பகுதி வாதுமக்களும், தாய்மார்களும்,
பெரியோர்களும், இளைஞர்களும், சிறுவர்களும் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானதின் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் துரை, சந்திரசேகரன்,
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்துவைத்தனர். தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் கால்பந்து போட்டியினை துவக்கி வைத்தார்.
ஆலயத் தலைவர் க.முருகேசன் தலைமை வகித்தார்.
ஆலய செயலாளர், பொறியாளர் லெ.அசோக்அருணகிரி வரவேற்புரையாற்றினார்.
சதாசிவம், தொண்டைமார், துரைசாமி முன்னாள் ஆலயத் தலைவர் மணி
இராஜகோபால் கூரையார்
சௌந்தரராஜன், மோகன், முனியாண்டி, ஆலய பொருளாளர் வீரவிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.