ராஜீவ் காந்தி அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை கண்டிக்கும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் இலக்கிய செல்வன் தலைமையில், துணைத் தலைவர் சந்தானபாரதி முன்னிலையில் இன்று பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் மறைந்த பாரத பிரதமர் அன்புத் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை கண்டிக்கும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், உருவபொம்மை எரிப்பு நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் கலந்து கொண்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
