ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமரட்டியாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான புதிய நியாய விலை கட்டிடம் கட்டும் பணியை முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வெயில்காந்தபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து காலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அழகப்பாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 11. லட்சம் மதிப்பிலான புதிய கலையரங்கம் கட்டிடப் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,
தகவல் தொழில்நுட்பப் பிரிவு அருண்குமார், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,
அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கோபி, முருகன், பழனி குமார், அரசு நியாயவிலை கடை தூத்துக்குடி மாவட்ட தலைவர் சின்னச்சாமி, குமரட்டியாபுரம் இணை செயலாளர் ராஜன், சங்கரலிங்கபுரம் கிளை செயலாளர் செல்வராஜ்,
காலாம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் சீனிவாச ராகவன், அழகப்பாபுரம் கிளைச் செயலாளர் மாரியப்பன், ஒப்பந்ததாரர் கண்ணன் கோவை செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.