ரூ.48.057 கோடி மின்சார செலவை மிச்சப்படுத்திய மதுரை ரயில்வே கோட்டம்.
ரூ.48.057 கோடி மின்சார செலவை மிச்சப்படுத்திய மதுரை ரயில்வே கோட்டம்.
காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்து வரும் மதுரை ரயில்வே கோட்டம், ரூ.48.057 கோடி மின்சார செலவை மிச்சப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகே காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது.
ரூ.72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலை 10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது . இந்த காற்றாலை மூலம் 2021 – 22-ம் ஆண்டில் 25.686 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15.412 கோடி மின்சார செலவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை மூலம் இதுவரை 80.095 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் ரூ.48.057 கோடி மின்சார செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்டைக் தகடுகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் 100% பகல் நேர மின்சார தேவை சமாளிக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.