BREAKING NEWS

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்று தனியாக வந்த வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி பரியில் ஈடுபட்டுதப்பி சென்றனர்.

 

இது குறித்து உடுமலைப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

 

 

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்தகண்ணன் மற்றும் சரவணன் ஆகிய இருவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் காந்தி நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடுமலைப்பேட்டை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

CATEGORIES
TAGS