வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சாலையில் உலா வரும் காட்டு யானை கூட்டம்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சிறு குன்றா எஸ்டேட் பகுதியில் பிரதான சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுகுன்றா. தாயமுடி. அக்காமலை. பண்ணி மேடு. ஷேக்கல்முடி. பாரளை. நடுமலை. சோலையார் சிலுவை மேடு. உள்ளிட்ட பகுதிகளின் சுமார் 200 மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.
10 மேற்பட்ட குழுக்களாக பிறிந்து இன்று மாலை 5 மணி அளவில் சிறுகுன்றா காட்டுப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டத்திற்கு பிரதான சாலையை கடக்கும் போது அப்பகுதியில் பேருந்து மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தனர் இதனால் அங்கு போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் என் சி எப் குரூப் சுற்றுலா பயணிகள் பகுதியில் அனுமதிக்க வண்ணம் யானை கூட்டத்தை பாதுகாத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.