விக்ரமசிங்கபுரம் நகராட்சியின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம் 30-9 2022 அன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் நகராட்சியின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றாவது வார்டு நகரமண்ட உறுப்பினர் வழக்கறிஞர் ஏ கிராஸ் இமாகுலேட் ஒன்று இரண்டு ஒன்பது ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு,

தினந்தோறும் குடிநீர் வேண்டும் என்று நகராட்சி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தினம் தினம் குடிநீர் வேண்டும் என்ற பதாகையுடன் தர்ணா போராட்டம் செய்தார் அவருடன் 14 வது வார்டு உறுப்பினர் திருமதி வைகுண்ட லட்சுமி அவர்களும் கலந்து கொண் டார்.

அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் தக்க பதில் கூறாததால் நிர்வாக குழு ககூட்ட அரங்கில் இருந்து இருந்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர் இருவரும் வெளிநடப்பு செய்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
