BREAKING NEWS

விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு! பிரேமலதா அதிர்ச்சி தகவல்!

விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு! பிரேமலதா அதிர்ச்சி தகவல்!

விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டு நலமுடன் வருவார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக் கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் விஜயகநாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டிருந்த அறிவிப்பில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை யாரு நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் விரைவில் பூரண உடல்நலத்துடன் விஜயகாந்த் மீண்டு வருவார் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )