விருத்தாச்சலத்தில் ஓட்சோ கூட்டமைப்பு சங்கம் சார்பில் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மக்கள் மன்றம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பல மாத ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும், அரசு பணியாளருக்கு தரவேண்டிய சலுகைகளை தர வேண்டும், ஊதியத்தையும் நேரடியாக வங்கி கணக்கிற்கு தர வேண்டும், பொங்கல் கருணை நிதி வழங்க வேண்டும் என பல தீர்மானங்களை முன்வைத்து இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் கூட்டத்தை தூய்மை பணியாளர் மற்றும் துப்புரவுக்காவலர் மாநில செயலாளர் செல்வராசு தலைமையில் நடைபெற்றது. முன்னிலை கிரிஜா மாநில பொருளாளர், சிறப்பு அழைப்பாளர் அமுல்ராஜ் ஒட்சோ அமைப்புகளின் நிறுவனர், லட்சுமணன் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் மாநில தலைவர் மற்றும் நூற்றுக்கு மேல் உறுப்பினர்கள் பங்கேற்று பொதுக்குழு கூட்டத்தில் நடத்தினர்.