விலை உயர்வை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட விலை உயர்வுகளை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே அக்கட்சியின் மேற்கு மாவட்ட தவைவர் கீழானூர் பிரேம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மோட்டார் சட்ட வாகனச் சட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய மாவட்ட தவைவர் கீழானூர் பிரேம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.
மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா..?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிவிடுவோம் என தேர்தல் வாக்குறுதியை அளித்துவிட்டு இன்றைக்கு வாக்களித்த மக்களை துரோகம் செய்துள்ளது.
மக்களுக்காக இன்றைக்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சி பகுஜன் சமாஜ் காட்சிதான் என்றும் தமிழக மக்களை வாட்டி வதைக்கின்ற பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மோட்டார் சட்ட வாகனச் சட்டம் ஆகியவைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.