விளையாடலாமா பேட்டை கொண்டா… கிரிக்கெட் ஆடி அசத்திய தஞ்சை மேயர்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தினமும் நமது வார்டு நமது மேயர் திட்டத்தின்படி வார்டு வாரியாக ஆய்வு செய்து வருகிறார்.


இன்று காலை 24 வது வார்டில் ஆய்வு மேற்கொண்ட மேயர் சன்.ராமநாதன் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலுக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இளைஞர்களை பார்த்து விளையாடலாமா பேட்டை கொண்டா எனக்கூறி கிரிக்கெட் பேட்டை வாங்கி கிரிக்கெட் விளையாடி அசத்தினார் அடுத்தடுத்த பந்துகளை சாதுரியமாக அடித்து விளையாடிய மேயரை பார்த்து விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
