விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி..!! தூக்கி வீசப்பட்ட விவசாயி..!! எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெருமாள் என்பவரது மகன் சிங்காரவேலு விவசாயம் செய்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாய நிலத்தில் கிடந்துள்ளது.
அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்ததில் சிங்காரவேலு தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து எடப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிங்காரவேலுவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார். மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.