வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் ஏரி நிரம்பி வரும் நிலையில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் தூசி மாமண்டூர் ஏரி நிரம்பி வரும் நிலையில் சுற்று வட்டார 18 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் சம்பா பருவத்திற்காக ஏரி மதகினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்து மலர் தூவி, இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட கழக துணை செயலாளர் லோகநாதன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் D.ராஜி அணுகாவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி,
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர், வெம்பாக்கம் மேற்கு கழகச் செயலாளர் தினகரன், செய்யாறு கிழக்கு செயலாளர் ஞானவேல், மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரிதிநிதிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
CATEGORIES திருவண்ணாமலை