BREAKING NEWS

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.

 

தமிழ்நாடு மூலிகை தாவரவியல்துறை மற்றும் அஸ்வகந்தா மூலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 

இதில் வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், வேடசந்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சௌடீஸ்வரி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதாபார்த்தீபன், வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையா, வடமதுரை பேரூராட்சித்தலைவர் நிருபாராணி கணேசன், அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன்,

 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர்.எஸ்.விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், வேடசந்தூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், விஜயலட்சுமி மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், திமுக நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

 

முன்னதாக கருத்தரங்கில் அஸ்வ கந்தா மூலிகை சாகுபடி சம்மந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )