BREAKING NEWS

வேப்பூரில் அர்ஜுன் சம்பத்துக்கு உற்சாக வரவேற்பு!!

வேப்பூரில் அர்ஜுன் சம்பத்துக்கு உற்சாக வரவேற்பு!!

 

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

 

அப்போது அவருக்கு, கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோட்டில், நல்லூர் பா.ஜ., ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

அப்போது பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து நிர்வாகிகள் வரவேற்றனர். பிரதமர் மோடியின் எட்டு ஆண்டு சாதனைகள் விளக்க புத்தகத்தை பா.ஜ., நிர்வாகிகளுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்கினார்.

 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது., தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் சுதந்திரமாக செயல்படவில்லை. கிராமப்புறங்களை மேம்படுத்த உள்ளாட்சி அமைப்புகளை சுதந்திரமாக செயல்பட வேண்டும். 

 

ஆனால், தி.மு.க.,வினர் செயல்படுத்த விடுவதில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளை மூடுவோம் என கனிமொழியும், மதுவை ஒழிப்போம் என முதல்வர் ஸ்டாலினும் கூறினர். 

 

 

தற்போது, தீபாவளி பண்டிகையின் போது, ரூ. 700 கோடி வரை மது விற்பனை நடந்தது. குஜராத்தில் மது விற்பனை வருவாயின்றி சிறப்பாக ஆட்சி செய்கின்றனர். வள்ளலாரின் 200வது அவதார ஆண்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 

 

 நிர்வாக‌ வசதிக்காக மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகா, ஒன்றியங்கள் பிரிக்கப்படுகிறது. அதில், விருத்தாசலம் மாவட்டமாக உருவாக தகுதி உடையது. விரைவில் கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலம் மாவட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

 

 

மேலும் இந்நிகழ்வில் பாஜக ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன், பட்டியல் அணி தலைவர் ராமசாமி, பொதுச் செயலாளர் ஆறுமுகம், சசிகலா, செந்தில்குமார், பொருளாளர் என்ஆர் செல்வகுமார், மத்திய நலத்திட்ட பிரிவு நகர்பாலகிருஷ்ணன், கடுகு ராஜன், பாலச்சந்தர்,

 

மத்திய பிரிவு அடரி சிலம்பரசன், பரமசிவம், இளைஞரணி சீனிவாசன், ஏஆர்பி ரங்கராஜன், விஜயகுமார் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )