BREAKING NEWS

வேப்பூரில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம்: போலீசார் விசாரணை.

வேப்பூரில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம்: போலீசார் விசாரணை.

 

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு சேலம் – கடலூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

 

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் த/பெ ஆறுமுகம், தன் மனைவி அனிதா, மகன் சித்தேஷ் ஆகியோருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் பச்சையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட தனது TN 05 BH 7343 பதிவெண் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுள்ளனர். 

 

அப்போது வேப்பூர் அடுத்த என் நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு த/பெ பெரியசாமி, தனது நண்பர் அன்பு சுந்தரம் என்பருடன் தனது கிராமத்தை நோக்கி தனது TN 32 AS 3172 பதிவன் கொண்ட டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது குழந்தைவேலு முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரியில் கைபட்டு நிலைதடுமாறி வாகனம் இழுத்துக் கொண்டு அருள் வந்த ராயல் என்ஃபீல்டு பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அருள் அவரது மனைவி அனிதா மகன் சித்தேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். குழந்தைவேலும் அவரது நண்பர் அன்பு சுந்தரமும் காயம் அடைந்தார்கள்.

 

பின்னர் ரத்த வெள்ளத்தில் கடந்த ஐந்து பேரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )