BREAKING NEWS

வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!

வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி தையல்நாயகி என்பவர் கடந்த 26 ஆம் தேதி காலை மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் சம்பவ இடம் சென்று சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

 

 

உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், இறந்த தையல்நாயகியின் முகத்தில் துணியால் மூடி கொலை செய்திருப்பதாக தகவல் கொடுத்தனர்.

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி காவியா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

 

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, குறிப்பாக தையல்நாயகியின் தம்பி சுப்பிரமணியன் என்பவரது மகள் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி க/பெ வெங்கடேசன் என்பவரும், அவரது ஆண் நண்பர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சுதாகரன் த/பெ சுப்பிரமணியன் இருவரும் சேர்ந்து முகத்தில் போர்வையால் அழுத்தி கொலை செய்து, தையல்நாயகி அணிந்திருந்த 6 பவுன் தங்க நகை எடுத்துச் எடுத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் நகைக்காக கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

 

அவர்களிடம் இருந்து ஆறு பவுன் தங்க நகையை பறிமுதல் செய்த போலீசார் சுதாகரன், ரேவதி ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

 

CATEGORIES
TAGS