வேலூர் துப்பறியும் மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா.

வேலூர் துப்பறியும்நாய் படை பிரிவில் கடந்த இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை பதினோரு ஆண்டுகள் காவல்துறையில் வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகள் புரிந்து திறம்பட பணியாற்றி மற்றும் கடந்த 2014ஆம் ஆண்டு மாநில அளவிலான துப்பறியும் நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் இரண்டாம் பரிசாக சில்வர் பதக்கத்தையும் பெற்று தற்போது வரை சிறப்பாக பணியாற்றி தற்போது 31.05.2022 அன்று பதினோரு ஆண்டுகள் நிறைவடைந்து இன்றுடன் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெறுகிறது .


இன்று அதை கௌரவிக்கும் முறையில் சிறப்பாக பணி நிறைவு விழா நமது துப்பறியும் மோப்ப நாய் லூசிக்கு நடத்தப்பட்டது என்பதை வேலூர் துப்பறியும் நாய் படை பிரிவு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
CATEGORIES வேலூர்
