வேலூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டம் படு ஜோர்!விலைவாசிகள் உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.

இணை ஆசிரியர் கி.கோ.இராமச்சந்திரன்.
உழைக்கும் வர்க்கத்தினர் தங்களுக்கு ஊதியம் ஈட்டி கொடுக்கும் பொருட்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, ஆகிய திரு நாட்கள் வருடம் தோறும் அக்டோபர் மாதம் கொண்டாடுவது வழக்கம்.
கொரோனா காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தினர் அரசின் தடையால் விமரிசியாக கொண்டாடாமல் வீடுகளுக்குள்ளேயே ஆயுதங்களுக்கு பூஜை செய்து வணங்கி வந்தனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தினால் தளர்வுகள் விலக்கப்பட்டதன் காரணமாக மக்களிடையே எழுச்சி காணப்படுகிறது.
இதனால் வியாபாரிகள் பண்டிகை கொண்டாடுவதற்கான வாழைமரம், பொரிக்கடலை, பழ வகைகள் பூசணிக்காய், பூஜை சாமான்கள் போன்றவை ஆங்காங்கே பெருமளவில் விற்கப்படுகின்றன.
இதை வாங்குவதற்கு வேலூர் மெயின் பஜாரில் பெரும் திரளான மக்கள் காணப்படுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பல மடங்காக விலை அதிகரித்துள்ளது.
இதுபொது மக்களுக்குக்கிடையே மனதில் குமுறல்கள் ஏற்படுத்தியுள்ளது.