ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 10ம் ஆண்டு தசரா திருவிழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
கோவில்பட்டி பாரதி நகர் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 10ம் ஆண்டு தசரா திருவிழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 10ம் ஆண்டு தசரா திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தூத்துக்குடி