BREAKING NEWS

10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான சிறப்பு கூட்டம்.

10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான சிறப்பு கூட்டம்.

 

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பு கூட்டம் 13.11.22 அன்று காலை அன்னை கல்யாண மண்டபத்தில் வைத்து மாவட்ட தலைவர் திரு அன்னை .M. ஜெகதீசன் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது

 

மாவட்ட செயலாளர் திருவீரவ நல்லூர் ப.மாரியப்பன் பிள்ளை சிறப்புரையாற்றினார்.

 

கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக மத்திய அரசு அளித்துள்ள 10% இட ஒதுக்கீட்டினை உடனடியாக தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

10% இட ஒதுக்கீட்டினை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்றும் 10% இட ஒதுக்கீட்டினை சட்ட வரைமுறைப்படுத்தி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பொருளாளர் முருகேசன் பிள்ளை அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

 

கூட்டத்தில் மாவட்ட நிர்வாக தலைவர் ஐயம்பெருமாள் மண்டல செயலாளர் குரு உலகநாதன் மாவட்ட இணைச்செயலாளர் பாலமுருகன் திருநெல்வேலி வாழ் சைவ வேளாளர் மகிமை சங்கத் தலைவர் வெங்கடேஷ் செயலாளர் பகவதி ராஜன் துணைத் தலைவர் பிளட் உலகநாதன் நிர்வாக உறுப்பினர் முத்துக்குமார் என் ஜி ஓ காலனி சைவ வெள்ளாளர் பேரவை தலைவர் சங்கரன், 

 

அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் காந்திமதிநாதன், வாஸ்து தளவாய் NGO காலனி சைவ வேளாளர் பேரவை முன்னாள் தலைவர் லட்சுமணன் செயலாளர் கோபாலகிருஷ்ணன்,  கார்த்திக்கேயன், செந்தில்குமார் டாக்டர் இளங்கோ 

 

கேடிசி நகர் சங்க பொருளாளர் நட்டார் இணைச் செயலாளர் டிராவல்ஸ் பிச்சையா தச்சநல்லூர் சைவ வேளாளர் சங்கம் அருள்ராஜ் மாணிக்கவாசகம் மீனாட்சிபுரம் அருணாச்சலம், தினதரணி ராமலிங்கம் பேரவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் சங்க கிளைசங்க நிர்வாகிகளும் இளைஞர் பேரவையினரும் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )