100-ஆண்டு பழைமைவாய்ந்த காளியம்மன் பகவதியம்மன் கிராம கோவில் திருவிழாவில் மாவிளக்குபூஜை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இந்திராநகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் பகவதி அம்மன் கிராமக்கோவில் திருவிழா நேற்று இரவு கரகம் ஜோடிக்கப்பட்டு வண்ண வண்ண வாணவேடிகையுடன் ஊர்வலமாக கோவில் வந்தது.

இன்று அதிகாலை அம்மனுக்கு 100-க்கு மேற்பட்ட மாவிளக்கு பூஜை முளைப்பாரி ஊர்வளம் மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்வுகள் நடந்தது தொடர்ந்து இன்று மாலை பொங்கள் வைபவம் நடைபெறும் நாளை காலை கிடாவெட்டுதல் அதனைத் தொடர்ந்து தீ சட்டி எடுத்தல் மற்றும் மாலை மஞ்சள் நீராட்டுவிழாவுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வுடன் திருவிழா முடிவுரும்.
CATEGORIES திண்டுக்கல்
