144 தடை உத்தரவு ஹோட்டல்களுக்கும் கல்விக்கூடங்களுக்கும் சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று கூறுவதற்காக உத்தரவு போடவில்லை என அமைச்சர் சந்தர பிரியங்கா காரைக்கால் அரசு மருத்துவமனை பேட்டி.

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையில் வாந்தி பேதியால் சிகிச்சை பெற்று வருபவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் துணை மாவட்ட ஆட்சியர் எம்.ஆதர்ஷ், காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணகி உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காலரா காய்ச்சல் என்று பொதுமக்கள் பீதிஅடைய வேண்டாம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நல்ல நிலையில் வீடு திரும்புவதாகவும் இன்னும் நான்கு ஐந்து பேர் தான் மருத்துவமனையில் இருக்கிறார்கள் அவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள். மேலும் குடிநீர் தொட்டிகளில் குளோரின் அதிக அளவு சேர்க்கக் கூறியுள்ளோம், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள். மேலும் பொதுப்பணித்துறை சுகாதாரத்துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார்கள் மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும், பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும், கைகளை சுத்தமாக கழுவி சூடான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். மேலும் பள்ளிகள் 3 நாள் விடுமுறை விடப்பட்டது அங்கு இருக்கும் தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதார முறையில் தன்னீர் தருவதற்குதான்.
144 தடை உத்தரவு ஹோட்டல்களுக்கும் கல்விக்கூடங்களுக்கும் சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று கூறுவதற்காக இந்த உத்தரவு போடவில்லை என அமைச்சர் சந்தர பிரியங்கா கூறினார்.