BREAKING NEWS

2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் தமாஷ் பேச்சு… பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டல்.

2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் தமாஷ்  பேச்சு… பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டல்.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.

தமிழ்நாட்டில் வருகிற 2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் பேசிய பேச்சு தமாசாக உள்ளது என்று கூடுவாஞ்சேரியில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டலாக பேசினார். கூடுவாஞ்சேரியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த பழமை வாய்ந்த பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு
அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிவாசல் தலைவர் முகமதுயூசுப் தலைமையில் துணை தலைவர் சித்திக், துணை செயலாளர் ஏ.எஸ்.கரீம், ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

 

 

இதில் முன்னாள் பொருளாளர் சேக்தாவூத் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுகுரு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி
மதுசூதனன், நந்திவரம் -கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, துணை தலைவர் ஜி.கேலோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு பிஜேபி ஆட்சி அமைக்க போவதாக அந்த கட்சியின் மாநில தலைவர் பேசியிருப்பது தமாசாக உள்ளது என்றும், பிஜேபி மட்டுமல்ல அதிமுக உட்பட எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. அதற்கான வாய்ப்புமில்லை. மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட கூறுகிறேன் என்று பேசினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )