தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் அவரது திருவுருவ படத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு அதிமுக சார்பாக அண்ணாவின் 114 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம்,
அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் அவரது திருவுருவ படத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு அதிமுக சார்பாக நகரச் செயலாளர் ரங்கநாதன் தலைமையிலும்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் .

இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுந்தர்ராஜ்,
மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெயக்குமார், நகரத் துணைச் செயலாளர் மயில்வேல், மாவட்ட பிரதிநிதி ராமுத்தாய், நகரத் துணைச் செயலாளர் பொன் ஈஸ்வரன், நகர இணை செயலாளர் சரவணன், எட்டாவது வார்டு செயலாளர் குமார் ,

14வது வார்டு செயலாளர் போஸ், ஏழாவது வார்டு செயலாளர் பால்பாண்டி கலை பிரிவு மாவட்ட செயலாளர் விருமன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
