BREAKING NEWS

ஈரோடு மாவட்டத்தில், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக நாட்டு நலப்பணி திட்ட தினத்தை முன்னிட்டு வருங்கால இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி செப்டம்பர் 24 இன்று பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பானுமதி தலைமையில் நடைபெற்றது.

 

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு லோகநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் பேரணியை தொடங்கி வைத்தார்.

 

 

இவ்விழாவில் அந்தியூர் அரசு மருத்துவர் கவிதா மருத்துவர் சங்கர் போக்குவரத்து ஆய்வாளர் தனசேகரன் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 

தலைமை மருத்துவ அலுவலர் விஸ்வேஸ்வரன் அந்தியூர் பேரூராட்சி உறுப்பினர்கள் பத்மநாபன், கீதா சேகர், உடற்கல்வி ஆசிரியர் சாமிநாதன், தமிழாசிரியர் சம்பத், பெத்துசாமி துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

இவ்விழாவில் சிறப்பாக இசை முழக்கம் மூலம் விழிப்புணர்வு பேரணியை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மிக சிறப்பாக நடத்தினார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )