BREAKING NEWS

அய்யாத்துரை என்ற ஸ்டாலின் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று மக்கள் தயாராக உள்ளார்கள் அது விரைவில் நடைபெறும் கோவில்பட்டியில் அவைத் தலைவர் தமிழ் மகன் பேட்டி.

அய்யாத்துரை என்ற ஸ்டாலின் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று மக்கள் தயாராக உள்ளார்கள் அது விரைவில் நடைபெறும் கோவில்பட்டியில் அவைத் தலைவர் தமிழ் மகன் பேட்டி.

 

செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் உள்ள தர்காவில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீண்டும் அமைந்திடவும் இடைக்கால பொதுச் செயலாளர் நிரந்தர பொதுச் செயலாளர் ஆகவும் தர்காவில் துவா மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசைன், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், நகர செயலாளர் விஜய் பாண்டியன்,

 

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி,

 

நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமி ராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,

 

 

மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் செல்வக்குமார்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மகளிர் அணி சுதா, ஹேமலா, பத்மாவதி, ஜெயந்தி,அதிமுக நிர்வாகிகள் மனோகரன், பழனிகுமார், முருகன், கோபி, பழனி முருகன், கனி, அழகர்சாமி,உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

பின்னர் அவைத் தலைவர் தமிழ் மகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

 

 

இயக்கத்தை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிற தமிழக முன்னாள் முதல்வர் மீண்டும் முதல்வராக வேண்டுமென்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் நல்லாட்சியை தர வேண்டும் என்று கழகத்தினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் நிரந்தரப் பொது செயலாளராக வேண்டும் என்றும்,

 

இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்திட வேண்டும் என்பதற்காகவும் தமிழகம் முழுவதும் 75 தர்காக்களில் துவா செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தும் எனது ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு உள்ளேன்.

 

 

இறைவனிடத்திலே நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் இந்த துவா மூலம் சிறப்பு பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளோம்.

 

எங்கள் பிரார்த்தனை நோக்கமெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரவேண்டும் அந்த சட்டமன்றத் தேர்தல் மூலமாக விடிய அரசை விட்டு அனுப்ப வேண்டும்.

 

 

மக்களுடைய செல்வாக்குடன் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எடப்பாடி ஆராய்ச்சி மீண்டும் அமைய வேண்டும் தமிழகத்தை ஆள வேண்டும் நல்லாட்சி தர வேண்டும் துவா செய்கிறோம் இந்தத் துவாவை ஏற்றுக் கொண்டு எல்லோரும் மன்றாடுவோம் வெற்றி பெறுவோம். 

 

நாட்டு மக்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டாலின் என்ற அய்யாதுரை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று மக்கள் தயாராக உள்ளார்கள் அது விரைவில் நடைபெறும் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )