பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்கள் மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்களை மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அரசு மதுபான கடை இயங்கி வந்த நிலையில் பல்வேறு கட்சி மற்றும் பொதுமக்களின் இடையூறாக இருப்பதாக கூறிபல கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட பின்பு அரசு மதுபான பார்களும் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியகுளத்தில் முக்கிய பகுதியாக உள்ள காந்தி சிலை முன்பாகவும் பொது மக்கள் நடமாடும் குடியிருப்பு பகுதிகளில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டது.
இந்த மது பான பாரானது பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் செல்லும் முக்கிய பகுதியில் உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து பெரியகுளம் பகுதியில் உள்ள மூன்று தனியார் மதுபான பார்களை அடைக்க கூறி பெரியகுளம் பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் முத்தையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பார்களை அடைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டமான பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.