தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் அதனை அடுத்து இன்று காலை ராஜவாய்க்காலை ஆய்வு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பாதிக்கபட்ட இடங்களை முறையாக பார்வையிடமால் மேலோட்டமாக பார்த்து சென்ற நிலையில்,
30 வது வார்டு பொதுமக்கள் சார்பாக தங்கள் பகுதியில் ராஜவாய்க்கல் தூர்வாரத நிலையில் அரசு உதவி பெறும் காது கேளாதோர் தனியார் தொடக்கப்பள்ளி முழுவதும் கழிவுநீரோடு சேர்ந்து தண்ணீரும் சேர்ந்து நிரம்பி உள்ளதாக கூறி ஆய்வுக்கு கூப்பிட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர் கூறும்போது தங்கள் பகுதியில் தங்கள் பள்ளி வளாக கட்டிடம் ராஜவாய்க்கல் ஒட்டி உள்ளதால் பலவருடங்களாக ராஜவாய்க்காலை தூர்வாரத காரணத்தாலும் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாகவும்,
கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பள்ளி கட்டிட வளாகங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் பள்ளி முழுவதும் மேல்தளத்தில் இருந்து தண்ணீர் விழுந்து வருவதாலும் மிகுந்த அச்சத்துடனே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மேலும் 10 கும் மேற்பட்ட மாணவர்கள் காய்ச்சல் ஏற்பட்டு பள்ளிக்கு வராத சூழல் நிலவி வருவதாலும் மேலும் காதுகேளாதோர் மாணவர்கள் முறையாக பயின்று வரும் நிலையில் இந்த மாதிரியான பிரச்சனைகளால் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்றும் ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக வார்டு கவுன்சிலரின் ஒத்துழைப்போடு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் 30வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் என்பதால் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அல்லிநகர்ம நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் பார்வையிட மறுத்தது குறிப்பிடதக்கது.